இந்தியர்களை அதிகம் கவர்ந்த பணப்பரிவர்த்தனை முறை எது தெரியுமா?


கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 9 வங்கிகள் UPI முறையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.





இந்தியர்களை அதிகம் கவர்ந்த பணப்பரிவர்த்தனை முறை எது தெரியுமா?





மாதிரிப்படம்




க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லாமல் இந்தியர்களை அதிகம் கவர்ந்த பணப் பரிவர்த்தனை முறையாக UPI பணப் பரிவர்த்தனை முறை உள்ளது.





கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 10.8 பில்லியன் UPI பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது 2018-ம் ஆண்டைவிட 188 சதவிகிதம் அதிகமாம். இதுகுறித்து ஆய்வறிக்கையை Worldline India நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பேமன்ட் முறைகள் குறித்து இந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.





கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன்முதலில் UPI பேமன்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இன்று டிஜிட்டல் பேமன்ட் முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் முறையாக UPI உள்ளது. 2019-ம் ஆண்டில் மட்டும் UPI மூலம் 18.36 ட்ரில்லியன் ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக 9 வங்கிகள் UPI முறையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.





தற்போது UPI சேவை வழங்கும் வங்கிகளின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட Worldline நிறுவனம் ஐரோப்பியாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Comments